Monday, March 23, 2015

FeTNA 2015 தமிழ் விழா - தன்னார்வலர்கள் கூட்டம் (மார்ச் மாதம்)

FeTNA 2015 தமிழ்  விழாவிற்கான தன்னார்வலர் கூட்டம் சன்னிவேல் ஆனத்தபவன் உணவகத்தில் நடைபெற்றது. வழக்கம் போல் சுமார் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பெரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற முன்னேற்றங்களை ஆர்வலர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

முதலாவதாக மார்கெட்டிங் குழுவினர் ஸ்பான்சர், விளம்பரதாரர்கள் மற்றும் மலர் விளம்பரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தனர். இந்த மாதம் வரை வருவாய் போக்கு நன்றாக போவதையும் தொடர்ந்து அதே முன்னேற்றத்தை பேணுவதின் அவசியத்தையும் எடுத்துரைத்தனர். அதே போல் பூத் எண்ணிக்கையை பெருக்குவதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்றனர்.

வருகை பதிவு குழுவினர், இதுவரை எவ்வாறு வருகை பதிவு ஆகி உள்ளது என்று விளக்கினர். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் முயற்சியுடன், தன்னார்வலர்கள் உதவியுடன் கடந்த ஒரு மாதத்தில் வருகை பதிவு ஓரளவு முன்னேற்றம் அடைய தொடங்கியுள்ளதையும், தொடர்ந்து அந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதின் அவசியத்தையும் தெரிவித்தனர்.  கலிபோர்னியாவின் நகர் வாரியாக கொடுக்கபட்ட பதிவின் படி பிரிமாண்ட் நகர் முன்னனியிலும் அதை தொடர்ந்து சான் உசே நகரமும் உள்ளது. இந்த பிரிவில் அடுத்த மாதம் டிரைவாலி முன்னுக்கு கொண்டுவர சாவல் விட பட்டது. அது மட்டுமன்றி, அந்த பிரிவில் புதிய நகரங்களும் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது

விழா நிகழ்ச்சி குழு இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தையும் விரிவாக விளக்கினர்.கடந்த வாரத்தில் விழாவிற்காக சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் தனுஷ் மற்றும் திருமதி ஐஸ்வர்யா தனுஷ்  வர ஒப்பு கொண்டுள்ளதையும் அறிவித்தனர்.பூத் குழு, வரவேற்பு குழு மற்றும் அரங்க குழு போன்றவை தங்களது பணியை தொடர்ந்ததையும் தெரிவித்தனர்.





மார்கெட்டிங் கமிட்டியினர் தாங்கள் ஆரம்பித்துள்ள புதிய மார்கெட்டிங் முறை மற்றும்  Whatsup குழுவினை நகர் வாரியாக அமைத்து ஒவ்வொரு நகரத்திலும் அதற்கான செயலை முன்னெடுப்பது பற்றியும் விளக்கினர்.தன்னார்வலர்கள் ஒவ்வொருவர் செய்ய வேண்டிய மார்கெட்டிங் வேலையும் விளக்கினர்.

TEF கமிட்டியினர் போட்டி Startup Pitchup competition  ஆரம்பித்ததை  அறிவித்தனர். இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து முன்னனி தொழிலதிபர்கள் கலந்து கொள்ள உள்ளதையும், Start Up கல்விக்கு பெரும்பாலான பேச்சாளர்கள் முடிவு செய்ய பட்டுள்ளதையும் தெரிவித்தனர்.

தமிழ் மன்ரம் சார்பாக திரு. ஆறுமுகம்  எவ்வாறு வருகை பதிவை அதிகரிப்பது மற்றும் தமிழ் மன்றம் எடுத்துவரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். திரு. தில்லை குமரன் மகக்ளிடையே பொதுவாக ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவு படுத்தினார். இந்த விழாவானது மற்ற விழா போலல்லாமல் ஒரு Experience  என்பதையும் தெளிவு படுத்தினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் விழா ஏற்பாடுகள் நல்ல முறையில் செல்வதையும் உணர்ந்து அடுத்த கூட்டத்தற்குள் தாங்கள் ஆற்ற வேண்டிய பணியை எவ்வாறு திறம்பட முன்னெடுத்து நடத்துவது  என்ற சிந்தனையோடு மகிழ்ச்சியோடு கலைந்தனர்.




Tuesday, March 3, 2015

FeTNA 2015 தமிழ் விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்



வரும் சூலை 2-5, 2015 ஆகிய தேதிகளில் வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் பொறுப்பேற்று நடத்தும் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் (வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை - www.fetna2015.org) தமிழ்த்திருவிழா வெகு சிறப்பாக சான் ஓசே நகரில் சிவிக் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு வகையான நிகழ்வுகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது.தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த இயல், இசை நாடக நிகழ்வுகள், தொழில் முனைவோருக்கான வழிகாட்டி அமர்வுகள், திரைப்படம் தொர்புடைய ஆளுமைகள், தமிழிசை, தமிழர்தம் பண்பாட்டு விழுமியங்களைக் காட்சிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு தரப்பினரையும் கவரும் வண்ணம் எண்பது மணி நேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் உங்கள் செவிகளையும் விழிகளையும் நிறைக்க நிகழ உள்ளன. உங்கள் கோடையைப் பயனுள்ளதாய் கழிக்க இன்றே பதிவு செய்யுங்கள். விழாவின் சிறப்பம்சங்களில் சில.


· திரைப்பாடகர் ஹரிசரன், சூப்பர் சிங்கர் பாடகர்கள் திவாகர், பிரகதி, பூஜா, மகிழினி ஆகியோர் விஜய் டிவி புகழ் பென்னட் இசை குழுவினருடன் இணைந்து நடத்தும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி · சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளார் திரு. பூமணி, அமெரிக்கவாழ் தமிழறிஞர்கள் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன், முனைவர் வி.எஸ். இராஜம், வைதேகி ஹெர்பெர்ட் போன்ற பல தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் · உங்களுடன் அளவளாவ “ஐ” திரைப்படப் புகழ் எமி ஜாக்சன் உட்பட பல தமிழ்த்திரை உலகின் முன்னனி நட்சத்திரங்கள் · இளையர்களுக்கான இளையர்களால் முன்னெடுக்கப்படும் அமர்வுகள் · அமரர் கல்கியின் காலத்தால் அழியாத காவியமான சிவகாமியின் சபதம் 3 மணி நேர நாடகமாக உங்கள் கண் முன்னே! · தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமான சிலிக்கன் வாலியின் முன்னனி அமெரிக்கத் தொழில் துறை வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல தொழில்துறை முன்னோடிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு. (http://tef2015.org/) · உங்களுக்குள்ளும் ஒரு தொழிலதிபர் இருக்கக்கூடும். உங்கள் யோசனைகளை வெற்றி பெரும் தொழில் நிறுவனமாக்க அனைத்து துறை வல்லுநர்களைக் கொண்டு ஒரு நாள் முழுதும் start-UP கல்வி, start-UP போட்டி,தொழில் முனைவோர் பட்டறை,முன்னனி தொழில் துறை தலைவர்களின் ஆலோசனைகள், அமெரிக்க வாழ் தமிழ் சாதனையாளர்களுக்கு விருது மற்றும் அவர்களுடன் மதிய உணவுடன் Business Networking -க்கான வாய்ப்பு (விழாவிற்கு வருபவர்களுக்கு சலுகை விலையில் அனுமதி சீட்டு) · மருத்துவத்துறையில் பணியாற்றுவோர் பயன் பெரும்விதத்தில் ‘தொடர் மருத்துவக் கல்வி’ (Continuing Medical Education) வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. · திரு. மணிமாறன் மற்றும் திருமதி மகிழினியின் பறை இசை நிகழ்ச்சியுடன் பல்வேறு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுத்தொடர்புடைய நிகழ்ச்சிகள் · முனைவர் சௌமியா அவர்கள் வழங்கும் ‘தமிழிசை’ நிகழ்ச்சி, குழந்தைகளுக்கு தமிழிசை பயிற்சிப் பட்டறை · கவிமாமணி அப்துல் காதர் அவர்கள் தலைமையில் ’ஆர்த்தெழு நீ!’ என்ற தலைப்பில் மாபெரும் கவியரங்கம் · கவிஞர் சுமதி ஸ்ரீ அவர்கள் நெறிப்படுத்தி நடத்தும் அனல் பறக்கும் கருத்துக்களம் · சன் டிவி புகழ் கல்யாண மாலை நிகழ்ச்சியுடன் அமெரிக்க மண்ணில் நடத்த இருக்கும் மாபெரும் ’நவீன திருமணம்’ இணை அமர்வு நிகழ்ச்சி. · PSG College,College of Engineering - Guindy மற்றும் பல கல்லூரிகளின் Alumni சந்திப்புகள் · அனைவரும் கலந்து கொள்ளகூடிய தமிழ் இலக்கிய வினாடி வினா மற்றும் தமிழ்த்தேனீ போன்ற ஆர்வத்தைத்தூண்டும் போட்டிகள் . சிறந்த குறும்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்படும் நிகழ்ச்சி - உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் திறனை வெளி கொணரும் புகைப்படம், சித்திரம், கவிதை மற்றும் திருக்குறள் போட்டிகள் · இத்துடன் வளைகுடா பகுதியின் முன்னனி உணவகங்களின் வாய்க்கு சுவையான தமிழ் மரபு சார் பல்சுவை உணவுடன் விருந்தோம்பல்


ஒரே விழாவில் இத்தனை நிகழ்ச்சிகளா? ஆச்சர்யம் ஆனால் உண்மை. உடனடியாக விழாவிற்கு பதிவு செய்யுங்கள்


Friday, February 27, 2015

தமிழ் விழா அனுமதி சீட்டு விவரம்

சுமார் 80 மணி நேரத்திற்க்குண்டான நிகழ்ச்சிகள் கொண்டு சிலிக்கன் வாலியில் நடைபெற இருக்கும் மாபெரும் தமிழ் விழாவிற்குண்டான நுழைவு சீட்டு பற்றிய தகவல்களை கீழே காணலாம். இந்த விழாவை வெற்றி விழாவாக மாற்ற அனைவரையும் நன்கொடையாளர்களாக இருந்து விழாவுக்கு ஆதரவளிக்க வளைகுடா பகுதி தமிழ் மன்றம் கேட்டு கொள்கிறது.
விழாவுக்கான அனுமதி சீட்டை www.fetna2015.org  என்ற தளத்திலிருந்தோ, வளைகுடா பகுதி தமிழ் மன்றத்திடமிருந்தோ வாங்கி கொள்ளலாம்.



Type
Benefit
Price (Before April 30 Price)
Adult Ticket
2 Day Event Registration (Includes 5 hours Light Music)
$75 ($67.50)
Young/Student
(10 – 18 age)
2 Day Event Registration (Includes 5 hours Light Music)
$55 ($49.50)
Child (<10)
2 Day Event Registration (Includes 5 hours Light Music)
Free
Adult Food
2 days  (lunch and dinner)*
$60
Young/Student Food
2 days  (lunch and dinner)*
$45
Entrepreneur Forum with FeTNA Registration
1 day event. Start UP Pitch up Competition/ Leaders talk/ Lunch with TAP Awardee/ Start Up Education Sessions/ Business Networking (Tickets From http://tef2015.org/)
$50
Entrepreneur Forum without FeTNA Registration
1 day event. Start UP Pitch up Competition/ Leaders talk/ Lunch with TAP Awardee/ Start Up Education Sessions/ Business Networking (Tickets From http://tef2015.org/)
$150
Donor - Vallal
Registration and Food for 2 people
Reception Dinner with Celebrities for 2 people
$500
Donor – Kodai Vallai -1
Registration and Food for 4  people
Reception Dinner with Celebrities for 4 people
$1000
Donor – Kodai Vallal - 2
Registration and Food for 2  people
Reception Dinner with Celebrities for 2 people
2 Nights stay in  1 Room
$1000
Donor – Perum Kodai Vallal 1
Registration and Food for 4  people
Reception Dinner with Celebrities for 4 people
2 Nights stay in  1 Room
$1500
Donor – Perum Kodai Vallal 2
Registration and Food for 3  people
Reception Dinner with Celebrities for 3 people
3 Nights stay in  1 Room
$1500
Donor – Perum Kodai Vallal 3
Registration and Food for 5  people
Reception Dinner with Celebrities for 5 people

$1500
Donor – Maperum Kodai Vallal
Registration and Food for 5  people
Reception Dinner with Celebrities for 5 people
3 Nights stay in  2 Rooms
$3000
Corporate Sponsor
Registration and Food for 5  people
Reception Dinner with Celebrities for 5 people
3 Nights stay in  2 Rooms
1 Prime Booth and other benefits
$5000
Group Registration (>10 person)
10% discount for Registration

$67.50($67.50)
Booth – Non Prime
Food for 1 person
$500
Booth Prime
Food for 2 person
$1000

* Planning to include breakfast also. (It is in discussion)



Thursday, February 5, 2015

FeTNA 2015 விழாவுக்கு United Airlines கொடுக்கும் சிறப்பு சலுகை

அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும்  பேரவையின் தமிழ் விழாவுக்கு விமானத்தில் வருவோர்க்கு சிறப்பு சலுகை விலையில் விமான டிக்கெட் கொடுக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இசைந்துள்ளது.இந்த சலுகையை பெற  உங்கள் பயண தேதி 6/29/2015 முதல்  7/8/2015 க்குள் இருக்க வேண்டும்.ZUFS693176 என்ற குறியீடை டிக்கெட் முன் பதிவு செய்யும் போது பயன்படுத்த வேண்டும்.





வெளி நாடுகளிலிருந்து  யுனைடெட் விமானத்தில் பயணம் செய்வோர் இந்த சலுகையை பெற யுனைடெட் விமான  வாடிக்கையாளர் சேவை தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Sunday, January 25, 2015

FeTNA 2015 விழாவில் ATMA அமைப்பின் தொடர் மருத்துவ கல்வி( CME )

பேரவையின் 2015 விழாவில் அமெரிக்க தமிழ் மருத்துவர் அமைப்பும்  (ATMA) இணைந்து சிறப்பிக்க உள்ளது அனைவரும் அறிந்ததே.  இவ்விழாவில் நடை பெற இருக்கும் தொடர் மருத்துவ கல்வி (CME) தொடர்பான செய்தியை  கீழே காணுங்கள்.

Continuing Medical Education (CME) Sponsored by FeTNA and ATMA

Dear Medical Practitioners and Allied Health Field Professionals,
It is our great pleasure to announce the 28th Annual Meeting of Federation of Tamil Sangams of North America and 11th Annual Convention of American  Tamil Medcial  Assocaition (ATMA) which  will be held at National City Civic Auditorium, San Jose, CA from July 2nd to 5th, 2015. 
The activities include bringing together of nearly 40 Tamil associations from north America for four days of cultural, music, and fun-filled events along with CME, Entrepreneur Forum, TAP (Tamil American Pioneer) award, etc. This is a great opportunity for you to meet your colleagues, friends and alumni in sunny California. We invite you all to join us, support and participate.

We plan to offer 8 hours of CME credit hours  as follows:
                        July 3rd Friday        7.45 am to 12.15 PM
                        July 4th Saturday   7.45 am to 12 .15 PM

CME Program Committee

FeTNA Representatives
ATMA Representatives
Kamal Kannan, Ph.D. (Co-Chair)
Biotechnologist
Ph: 650 346 9341
Indran Indrakrishnan, M.D. (Co-Chair)
 Professor of Medicine
Emory University School of Medicine, GA
Bindrak@emory.edu
Nirmala Kannan, M.D.
Ph: 510 967 9567
Yasodha Natkunam MD
Professor of pathology
Stanford University, CA
yaso@stanford.edu
Sankari Kasi, M.D.
Ph: 925 303 3215
Jay Gopal MD
Washington DC
jayjgopalmd@gmail.com
Mrs. Sarguna Pakiaraj
Registered Nurse Practitioner
Ph: 408 396 8608
Deeptha Nedunchezhian MD
New York
drdeeptha@aol.com

Radha Syed MD
New York

Santhi Raja, M.D., A.B.
Ph: 562 377 4573
Einsteen Arunachalam MD
Kansas City
aruneinstein@yahoo.com


Sunday, January 11, 2015

FeTNA 2015 விழா - தன்னார்வலர்கள் கூட்டம் - 3

FeTNA 2015 விழாவிற்கான தன்னார்வலர்கள் கூட்டம் இன்று (1/11/2015) மிலிபிடாஸ் திருப்பதி பீமாஸ் உணவகத்தில் நடைபெற்றது. இது மூன்றாவது மாதாந்திர கூட்டம் ஆகும். 50க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர்.விழாவிற்கு திரு.குணா தலைமை தாங்கி வழிநடத்தினார்.  சென்ற கூட்டத்தில் செயல் பொருளாக வைத்திருந்த corporate நிதி இரட்டிக்கும்  செய்தி பற்றிய விவரங்களை வலைதளத்தில்   சேர்த்திருப்பதை உறுதி செய்தார்.திரு. தில்லை குமரன்  கடந்த ஒரு மாதத்தில் நடந்த முன்னேற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார். புதியதாக வடிவமைக்க பட்ட விளம்பர மாதிரியை அனைவருக்கும் காட்டினார்.

புதியதாக முடிவு செய்யபட்ட விழா விருந்தினர்கள் பற்றி கூறினார். கீழ்காணும் புதிய விருந்தினர்கள் தேர்வு செய்யபட்டுள்ளனர்.

1. சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழறிஞர் - பூமணி
2. பாரம்பர்ய பறை இசை -  மணிமாறன் மற்றும் மகிழினி
3. விஜய்  தொலைகாட்சி புகழ். Bennet and Band
4. பாடகர்கள் ஹரிசரன், திவாகரன், பிரகதி, மகிழினி மற்றும் பூஜா.

மார்கெட்டிங் மற்றும் விளம்பரங்களை  சேர்க்கும் பணியின் முக்கியத்துவத்தையும் அதற்கான அனைவரின் உதவியையும் கோரினார்.தன்னார்வலர்கள் அனைவரும் கொடைவள்ளலாக வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அது மட்டுமன்றி பல்வேறு கமிட்டிகளுக்கு தன்னார்வல தொண்டர்கள் தேவை படுவதாகவும் கூறினார். www.fetna2015.org என்ற வலைதளத்தில் அனைத்து கமிட்டிகளின் பெயரும் உள்ளதாகவும் அவரவை விருப்பபடும் கமிட்டிகளில் இணையுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.


அடுத்ததாக பல்வேறு குழுக்கள் இதுவரை செய்துள்ள பணிகள் பற்றிய குறிப்பு தெரிவிக்கபட்டது.

வளைகுடா பகுதி தமிழ் மன்றம் நடத்த இருக்கும் பொங்கல் விழா பற்றிய செய்தியும் அதில் பங்கு பெற அனைவரையும் வரவேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு வளைகுடா பகுதியின் பல இடங்களிலிருந்து தன்னார்வலர்கள் வந்ததோடு சாக்ரிமென்டோ பகுதியில் இருந்து கூட வந்து இருந்ததை காணும் போது அனைவரும் முழு மூச்சோடு செயல்பட்டு இந்த விழாவின் வெற்றிக்கு வழிவகை செய்வார்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது.

Sunday, December 21, 2014

பேரவையின் தமிழ் விழா ஒரு அறிமுகம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பது  வட அமெரிக்காவில் உள்ள பற்பல தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த பேரவையின் ஆண்டு விழாவை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று தங்களது நகரத்தில் நடத்தி வருகிறது. உலகெங்கிலுமிருந்து இயல், இசை, நாடகம் மற்றும் சினிமா துறையை சார்ந்த பல்வேறு கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு முத்தமிழில் இனிமையான விருந்து படைப்பர். வட அமெரிக்காவின் பல பகுதியிலிருந்தும் தமிழர்கள்  இந்த நிகழ்ச்சியை கண்டு களிப்பதோடு , தமிழ்ச் சொந்தங்களோடு உறவாடவும் ஒரு வாய்ப்பாகவும் கருதி தொடர்ந்து வரும் வண்ணம் உள்ளனர். பேரவையின் வரலாற்றில் முதல் முதலாக பேரவையின்  ஆண்டு  விழாவை நமது வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், தமிழ்நாடு அறகட்டளையுடன் சேர்ந்து மேற்கு கடற்கரையோரம்  சான் ஓசே நகரில்  2015ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை   நடத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தன்னார்வ தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு நடந்து வருகிறது.

தமிழ்நாடு அறகட்டளை  (TNF -Tamilnadu Foundation) மற்றும்  அமெரிக்க தமிழர் மருத்துவர் அமைப்பு (ATMA - American Tamil medical Association) ஆகியோரும் இவ்விழாவினை கலந்து சிறப்பிக்க முன்வந்துள்ளார்கள்.இந்த விழாவில் கிடைக்கும் லாபத்தின் ஒரு முக்கிய பகுதி நமது வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்க  பயன்பட போகிறது என்பதும் குறிப்பிட தக்கது.

விழாவின்  அமைப்பு

இரண்டு நாட்கள் முழுமையாகவும் முதல் நாள் மற்றும் கடைசி நாள் பகுதி பொழுதிலும் இந்த விழா நடைபெறும். ஜூலை மாதம் 2ம் தேதி மாலை  உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும்  சிறப்பு விருந்தினருடன் இரவு சிறப்பு விருந்து  மற்றும் அளவளாவல் நடைபெறும். இந்த விருந்தில் விழாவிற்கு நன்கொடை அளித்த அனைவரும் இலவசமாக  கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ள பிறர் சிறப்பு கட்டணம் கொடுத்து அனுமதி சீட்டு வாங்கி கொள்ளலாம். ஜூலை மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் சான் ஒசே நகரிலுள்ள சிவிக் அரங்கில் காலை முதல்  இரவு வரை  முழுமையாக முதன்மை மற்றும் இணை அரங்குகளில் அனைத்து தரப்பு மக்களின் ரசனைகளையும் நிறைவுச் செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூலை 5 ம் தேதி சிறப்பு விருந்தினர்களுடன் இலக்கியச் சந்திப்பு நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். தமிழகத்திலிருந்து வந்திருந்த பெரும்பான்மையான கலஞர்களும், அறிஞர்களும் தமிழுக்காக இலக்கியத் தரம் மற்றும் மனதைக் கவரும் நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சி உலகில், ஏன் தமிழத்தில் கூட நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது,

விழாவின் சிறப்பு

பொதுவாக அமெரிக்காவில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒரு சில மணி நேரங்கள் நடந்து   இலக்கியம், இசை, சினிமா என எதாவது ஒரு விருப்பத்தை நிறைவுச் செய்வதாகவே இருக்கும். அவ்விழாவிற்கான சிறப்பு விருந்தினரும் ஒரு சிலரே இருப்பர். குடும்பத்தோடு விழாவிற்கு செல்லும் போது அந்த நிகழ்ச்சியும் குடும்பத்தில் ஒரு சிலரின் விருப்பத்தை மட்டும்  நிறைவுச் செய்வதால் அந்த நிகழ்ச்சியில் விருப்பம் இல்லாதவர்கள் மற்றவர்களின் விருப்பத்திற்காகச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் பேரவை  விழா என்பது தமிழ் இலக்கியம், தமிழ் இசை,  கர்நாடக (தமிழ்) இசை, ஆன்மீகம்,தொல் தமிழ் இசை (பறை போன்றவை), பரத நாட்டியம், தொல் தமிழ் கலைகள், நவீன நாடகம் மற்றும் தொல் தமிழ் நாடகம் (கூத்து,நாட்டிய நாடகம் போன்றவை), தமிழ் ஆர்வலர் மற்றும் உணர்வாளர்   சார்ந்த நிகழ்ச்சி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சி, தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சி  , திரைப்பட ஆர்வலர்களுக்கான நிகழ்ச்சி என அனைத்து தரப்பு மக்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் சுமார் 80 மணி நேரத்திற்கும் மேலான நிகழ்ச்சி நடைபெறும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முக்கிய மற்றும் பல இணை அரங்குகளில்  ஒரே நேரத்தில் இணையாக நடந்து கொண்டிருப்பதால் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை தேர்வு செய்து  விருப்பமான நிகழ்ச்சியை மட்டும் கண்டுகளிக்களாம். பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் ஒரே அரங்கில் வெவ்வேறு அறைகளில் நடைபெறுவதால் ஒரே குடும்பம் அல்லது குழுவை சேர்ந்தவரக்ள் தங்களுக்கு பிடித்து அரங்குகளில் என்று நிகழ்ச்சியை பார்த்து விட்டு பிறகு எளிதில் ஒன்று கூடி விடலாம்.தமிழகம் மற்றும் உலகெங்கிலிருந்து தமிழ் இலக்கியம்  மற்றும் திரைபடத்துறை  சார்த்த பல்வேறு பிரபலங்கள்  மிக பெரிய அளவில் வந்து கலந்து கொள்வார்கள்.

கடந்த விழாக்களில் கலந்து கொண்ட சிலர்: நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், நாசர், விக்ரம், கார்த்தி, சிவகுமார், மனோரமா; இசையமைப்பாளர்கள் இளையராஜா, பரத்வாஜ், பாடகர்கள், TM சௌந்திரராஜன், சுசீலா, வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், கிரிஷ், சின்மன்யி போன்ற பலர்;  பாடலாசிரியர்கள் தாமரை, குட்டிரேவதி, வைரமுத்து, அறிஞர் பெருமக்கள் பிரபஞ்சன், இளங்குமரனார் அய்யா; 2003 விழாவைத் துவக்கி வைத்தவர் இந்திய குடியரசு தலைவர் மேதகு முனைவர் அப்துல் கலாம் அவர்கள். அரசியல்வாதிகளான அய்யா நல்லகண்ணு, மகேந்திரன், இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், சீமான், மேலும் பலர் பேரவை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

அது மட்டுமன்றி புலம் பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறி அறிவியல்,தொழில் நுட்பம், தொழில் மற்றும்  கலை துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை சிறப்பிப்பதோடு அவர்கள் மூலம் இளம் தலைமுறையினருக்கு சாதனைகள் செய்ய ஊக்க படுத்தவும் படுகிறது. உலகில் பெரும்பான்மையான  மாபெரும் தொழில் நுட்ப நிறுவனங்களை விதையாக இடபட்டு ஆலமரமாக வளர்ந்திருக்கும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் நடைபெறும் இந்த விழாவில் தொழில் முனைவோர்களுக்காவும் , தொடக்க நிலை தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கும், உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ஊக்குவிப்பதோடு அதற்கு தேவையான தகவல்களை தரவும் , முன்னனி தொழில் நிறுவனங்களின் உயரதிகாரிகள் ,ஸ்டான்போர்டு போன்ற பலகலை கழக பேராசிரியர்கள், முதலீட்டாளர்கள், வெற்றிகரமாக தொழில் தொடங்கி நடத்தி வருபவரகள்  என அனைத்து தரப்பினர்களையும் கொண்டு ஒரு நாள் முழுக்க நிகழ்ச்சி நடத்துவதோடு Busines Networking செய்யவும் திட்டமிடபட்டுள்ளது. நீங்கள் தொழில் முனைவோராகவோ  , துவக்க நிலை தொழில் தொடங்குவோராகவோ, அதை விட முக்கியமாக இடைநிலை/உயர் பள்ளி அல்லது பல்கலைகழகம் படிக்கும் குழந்தைகளின் பெற்றோராக இருந்தால், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு  நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில்   கலந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக வளைகுடா பகுதியில் ஒருசில மணிநேரம்  நடைபெறும் மெல்லிசை நிகழ்ச்சியை காண மிக பெரிய அளவில் பொருள் செலவு செய்து செல்கிறோம். இந்த பேரவை விழாவிலோ 80 மணி நேரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளை கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி செய்வதோடு மட்டும்  அல்லாமல் ஜூலை மாதம் 4ம் தேதி மாலையிலிருந்து நள்ளிரவு வரை தமிழகத்திலிருந்து வரும் பிரபலமான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை கொண்டு மாபெரும் மெல்லிசை விருந்தும் படைக்க பட உள்ளது. விழாவிற்கான டிக்கெட்டின் விலையிலேயே இந்த மெல்லிசை நிகழ்ச்சிக்கான அனுமதியும் இலவசம். இத்தனை சிறப்பான நிகழ்ச்சிகளையும் குறைந்த விலையிலேயே காண உடனே ஜூலை மாதம்  3 மற்றும் 4 ம் தேதியை உங்கள் காலண்டரில் இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள்.

இவ்விழாவிற்கான டிக்கெட்டுகளை வாங்க, இந்த விழா பற்றிய குறிப்புகள் மற்றும் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்கள் பெயர்களை அறியவும் அவ்வப்போது www.fetna2015.org  என்ற வலை தளத்துக்கும் என்ற  www.fetna2015.blogspot.com வலைமனையிற்கும் அடிக்கடி வருகை தாருங்கள்.

இவ்வளவு பெரிய விழாவை நடத்துவதற்கு  டிக்கெட் வாங்குவதற்கு பதில் சிறிது அதிகம் பணம் கொடுத்து நன்கொடையாளராக இருந்து விழாவை வெற்றிகரமாக நடத்த  உதவி செய்வதோடு நன்கொடையாளர்களுக்கான சிறப்பு  சலுகையான பிரபலங்களோடான இரவு விருந்து போன்ற சலுகைகளையும் அனுபவிக்க தவறாதீர்கள்.



இந்த ஒரு அரிய வாய்ப்பு இது வரை மேற்கு கடற்கரையில் வாழும் தமிழர்களுக்கு கிட்டவில்லை. எனவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து இவ்விழாவை வெற்றியடைய அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.